சீறிய
சிந்தனையை
சிந்தையில் வைத்து
சிறகடிக்கத் தொடங்கினால்…!
வானும் நமக்கு
வழி வகுக்கும்
காற்றும்
கை கொடுக்கும்…!! 🙂
கிறுக்கன்.. 🙂
0
கண்ணீரைத் துடைக்க
வராத
கயவரின் கரங்கள்
புன்னகையின் போது
கைகுலுக்கிடவும்
கட்டிப்பிடிக்கவும்
தேவையில்லை…
உனது வாழ்க்கைச்
சுமையை சுமக்க
உனதிரு கால்கள் போதும்
விருப்பமெனில்
கல்லறைக்கு
உன்னை சுமக்க
துணைக் கால்கள்
வரட்டும்…
நயவஞ்சக நரிகளின்
நகல் முகங்களின்
முனகல்களை
மூலையில் முடக்கி
முயன்று முன்னே
செல்…
உன்னத
உலகு
உனதாகட்டும்…
— கிறுக்கன் 🙂
நாகரீகம் கருதி
நான் வளர்த்த தாடி…!
இன்று
கவலையின் சின்னமாய்
பரிணாமித்தது…!!
ருசிக்கு அருந்திய
மதுவோ…!
இன்று
பசிக்கு இரையகிக்
கொண் டிருந்தன…!!
வேதனையில்
காகிதத்தை கீறிய
யெனது பேனா கீறல்கள்…!
இன்று
கவிதை யாயின…!!
எனது ‘கரு’வை
சுமப்பே னெனக் கூறிய
நீ யிருப்பதோ…!
எனது கிறுக்கலின்
‘கரு’வாய் மட்டும்…!!
என்னைச் சுற்றி
எத்தனை மாற்றங்கள்…!
என்னைத் தவிர…!!
தயாரா கிறேன்
நானும்…!
நல்ல தோர்
மாற்றம் தேடி…!!
— கிறுக்கன் 🙂
ஏன் இன்னும் பற்பல…!
இவ் விடத்தின் கருவறையினில்
கடவு ளிருக் கிரானோ இல்லயோ…!!
அவ் வனைத் திடத்தின் வாசற் படியில்
இவர்களின் ‘கரு’ வுருவங்கள்…!!!
கோட்டையை பிடித்து
கோடியில் சுரண்டும்
பற்பல மாந்தர்களை
சித்தரிப் பதனை நிருத்தி விட்டு..!
நம் தெருக் கோடியில் இருக்கும் இந்த
மனிதர்களை பற்றி
ஒருமுறை
கிறுக்க துவங்கினேன்…!!
இவர்களைப் பற்றிய
சிந்தனை சிந்தையில்
சில்லரைகளாய் சிதறிக் கிடந்தும்..!
பொருக்கி யெழுத
அனுபவ மின்றி நின்றேன்….!!
நானு மொரு பிச்சைக்காரனாய்…. 😦
— கிறுக்கன்
image source : http://www.kamat.com/kalranga/bhiksha/begging.htm