சிறகு

Posted: ஓகஸ்ட் 6, 2012 in Uncategorized

சீறிய
சிந்தனையை
சிந்தையில் வைத்து
சிறகடிக்கத் தொடங்கினால்…!
வானும் நமக்கு
வழி வகுக்கும்
காற்றும்
கை கொடுக்கும்…!! 🙂
கிறுக்கன்.. 🙂

விசித்திரன்..

Posted: ஜூலை 23, 2012 in Uncategorized

Image

கண்ணீரைத் துடைக்க
வராத 
கயவரின் கரங்கள்
புன்னகையின் போது
கைகுலுக்கிடவும்
கட்டிப்பிடிக்கவும்
தேவையில்லை…

உனது வாழ்க்கைச்
சுமையை சுமக்க
உனதிரு கால்கள் போதும்
விருப்பமெனில்
கல்லறைக்கு
உன்னை சுமக்க
துணைக் கால்கள்
வரட்டும்…

நயவஞ்சக நரிகளின்
நகல் முகங்களின்
முனகல்களை
மூலையில் முடக்கி
முயன்று முன்னே 
செல்…

உன்னத 
உலகு
உனதாகட்டும்…

— கிறுக்கன் 🙂

கர்மம்

Posted: ஜூலை 11, 2012 in Uncategorized

// Image

ஊரே

பஞ்சத்தில்  

தலைவிரித்து 

ஆடிக்கொண்டிருந்த 
 
பொழுது…!
 
நான் 
 
விதைத்த 
 
வினை மட்டும் 
 
விளைந்து கொண்டிருந்தது
 
செழிப்பாய்…!!
 
–கிறுக்கன் 

Image

பொறியியற் கல்லூரிகள்…!
இன்று
தெருவிற் குத்தெரு
பானி பூரி கடைகளுக்கு
போட்டியாய்…!!

அறி வெனும்
பசி யெடுத்து வருவோர்க்கு…!
வெகு நேரங் காக்க விட்டு
இவர்கள் புகட்டு வதேனோ
தற்காலிக கால் வயிறு
சிற்றுண்டி மட்டுமே …!!

நொடிக்கு நொடி…!
உடையும் பூரிகளாய்
மாணவர்கள்…!!

–கிறுக்கன்

பரிணாமம்

Posted: ஜூலை 1, 2012 in Uncategorized

Image

நாகரீகம் கருதி

நான் வளர்த்த தாடி…!

இன்று
கவலையின் சின்னமாய்
பரிணாமித்தது…!!
ருசிக்கு அருந்திய
மதுவோ…!
இன்று
பசிக்கு இரையகிக்
கொண் டிருந்தன…!!
வேதனையில்
காகிதத்தை கீறிய
யெனது பேனா கீறல்கள்…!
இன்று
கவிதை யாயின…!!
எனது ‘கரு’வை
சுமப்பே னெனக் கூறிய
நீ யிருப்பதோ…!
எனது கிறுக்கலின்
‘கரு’வாய் மட்டும்…!!
என்னைச் சுற்றி
எத்தனை மாற்றங்கள்…!
என்னைத் தவிர…!!
தயாரா கிறேன்
நானும்…!
நல்ல தோர்
மாற்றம் தேடி…!!
— கிறுக்கன் 🙂

திருவோடு..

Posted: ஜூன் 29, 2012 in Uncategorized
குறிச்சொற்கள்:,
Image
கோயில், தேவாலயம், மசூதி
ஏன் இன்னும் பற்பல…!
இவ் விடத்தின் கருவறையினில்
கடவு ளிருக் கிரானோ இல்லயோ…!!
அவ் வனைத் திடத்தின் வாசற் படியில்
இவர்களின் ‘கரு’ வுருவங்கள்…!!!
 
கோட்டையை பிடித்து
கோடியில் சுரண்டும்
பற்பல மாந்தர்களை
சித்தரிப் பதனை நிருத்தி விட்டு..!
நம் தெருக் கோடியில் இருக்கும் இந்த
மனிதர்களை பற்றி 
ஒருமுறை
கிறுக்க துவங்கினேன்…!!
 
இவர்களைப் பற்றிய 
சிந்தனை சிந்தையில்
சில்லரைகளாய் சிதறிக் கிடந்தும்..!
பொருக்கி யெழுத
அனுபவ மின்றி நின்றேன்….!!
 
நானு மொரு பிச்சைக்காரனாய்…. 😦
 
— கிறுக்கன்
 

நான்….

Posted: ஜூன் 26, 2012 in Uncategorized

Image

நான்….

கரம் பிடிப்பாளெனக்
காத்திருந்த
காதலி
கை விட்டுச்சென்றா ளென்ற
காரணத்தினால்…

காதலி மீதிருந்த 
காதலை
கை விடத் தெரியாமல்
காதலை
காதலிக்கும்
காதலன்…. ❤

— கிறுக்கன்

நினைவெல்லாம்…..

Posted: ஜூன் 24, 2012 in Uncategorized

என் பெயர்

எனக்கே மறந்த

அந்த மாலைப் பொழுது….!

என் பெயரிட்டு 

நீ அனுப்பிய குருஞ்செய்தியினால்

சினுங்கிய என் கைபேசி….!!

என் பெயரினை 

எனக்கு நினைவூட்டி

என்னை சிலிர்க்க வைத்தது….. 🙂

கிறுக்கன்..

Image

உன் நினைவென்னும்
சாரலில்
நனைகின்றேன் நான்…..

காதலென்னும்
குடை பிடிக்க
வாராயோ…..

காத்து இருக்கின்றேன்….

என்றும்…… 🙂

— KS

காதல்

Posted: ஜூன் 23, 2012 in Uncategorized

காதலிலே
தற்கொலைகள் கொறஞ்சே போச்சு ….!

நடமாடும் பிணங்களின் எண்ணிக்கை
அதிகம் ஆச்சு ….!!

இக்காதல் பூவுலகில்
நடமாடும் பிணங்களின் நடுவே
நானும் ஒருவனாய்…!!!

— கிறுக்கன்

Image